என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "REQUEST TO RENOVATE RANJANGUDI FORT"

    • ரஞ்சன்குடி கோட்டையை சீரமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • புத்தக கண்காட்சி நடத்தவும் மனு அளித்தனர்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ளது ரஞ்சன்குடி கோட்டை. 17 வது நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    மசூதியும், கோயிலும் உள்ளடக்கிய இக்கோட்டை சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகவும் உள்ளது

    கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் இக்கோட்டையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துவிட்டது.

    ஆறுமாதங்கள் கடந்த பின்பும் சிதிலமடைந்த பகுதி சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மீண்டும் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் சேதமடைந்துள்ள ரஞ்சன்குடி கோட்டையை சீர்செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    சமூகநீதி படைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் தாஹிர் பாஷா தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.




    ×