என் மலர்
நீங்கள் தேடியது "Renovation of Thaipusathera"
- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுப்பார்கள்.இந்நிலையில் தேரில் சில பாகங்களில் பழுது ஏற்பட்டது. அதனை சீரமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
- தேரின் மையப் பகுதியான சுவாமி பீடம் போன்றவை இலுப்பை மரத்தினால் புதிதாக செய்யப்படும் பணியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ஈடுப ட்டுள்ளனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் உப கோவி லான பெரியநாயகியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுப்பார்கள்.இந்நிலையில் தேரில் சில பாகங்களில் பழுது ஏற்பட்டது. அதனை சீரமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொட்டகை அமைத்து தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேரின் சக்கரத்தை தவிர மற்ற அனைத்து பாகங்களும் புதுப்பிக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு சீரமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. தேரின் மையப் பகுதியான சுவாமி பீடம் போன்றவை இலுப்பை மரத்தினால் புதிதாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பணியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ஈடுப ட்டுள்ளனர். தற்போது தேரை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 மாதத்துக்குள் இப்பணிகள் நிறை வடையும் என கோவில் அதிகாரி தெரிவித்தார்.






