என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reluctant to come to the market"

    • தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை பல கடைகளில் குறைந்துள்ள போதும் வாரச்சந்தையில் வியாபாரிகளே விலையை நிர்ணயித்து ரூ.100க்கு மேல் விற்று வருகின்றனர்.
    • னவே அதிகாரிகள் காய்கறிகளின் விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு உரிய விலையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை கடும் உச்சத்தை தொட்டது. தக்காளி ரூ.160க்கும், சின்ன வெங்காயம் ரூ.200க்கும் விற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் ரூ.150, தக்காளி ரூ.120 என குறைந்தது. கடந்த வாரம் இரண்டுமே சம அளவில் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    தற்போது வார சந்தையில் தக்காளி ரூ.120க்கும், ரூ.110 க்கும் விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் ரூ.120, ரூ.110 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இதனால் வாரச் சந்தைக்கு வரும் பொது மக்களின் வரத்து பெரும்பாலும் குறைந்து காணப்பட்டது. தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை பல கடைகளில் குறைந்துள்ள போதும் வாரச்சந்தையில் வியாபாரிகளே விலையை நிர்ணயித்து ரூ.100க்கு மேல் விற்று வருகின்றனர்.

    பொது மக்கள் மற்ற கடை களில் விலை குறை வாக உள்ளது என சொன்னால் மட்டும் அவர்களுக்கு விலை குறைத்து கொடுக்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து 2 மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்று வரு கின்றனர். பல இடங்களில் விலை குறைந்த போதும் சந்தையில் வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு கூடுதலாக வைத்து விற்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் காய்கறிகளின் விலையை நிர்ணயித்து பொதுமக்களுக்கு உரிய விலையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×