என் மலர்
நீங்கள் தேடியது "Relocation of bar"
- ஆற்காடு நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆற்காடு:
ஆற்காடு நகரமன்ற கூட்டம் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைதலைவர் பவளகொடிசரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரில் உள்ள30 இடங்களில் உள்ள ஆழ்துறை கைபம்புகளை மாற்றி புதியதாக சிறுவிசை பம்ப் குடிநீர் தொட்டி மற்றும் மோட்டார் பொறுத்துதல், தோப்புகானா நகாராட்சி உயர்நிலைபள்ளியில் கட்டத்தின் பழுதடைந்துள்ள மேல்தளங்களை ரூ.3.80லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் அதேபோல் சித்தமருத்துவமனை கட்டிடத்தின் மேல்தனம் ரூ.2.80 மதிப்பீட்டில் பழுது பார்த்தல், அண்ணாநகர் நடுநிலைப்பள்ளியில் உள்ள பழைய கழிப்பிடத்தை இடித்து விட்டு ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கழிப்பிட கட்டிடம் கட்டுதல் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றிட ரூ.6 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது.
பொன்ராஜசேகர்- நகரில் தூய்மை பணிகள் சரியாக நடைபெறவில்லை அதனை சரிசெய்யவேண்டும்
ரவிச்சந்திரன்: எனது வார்டில் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு மட்டும் காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. மற்றொரு பள்ளிக்கு வழங்கப்பட வில்லை. அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டம் வழங்க வேண்டும்.
ஆணையாளர் கணேசன்: நகராட்சி பள்ளிகள் எத்தனை உள்ளன என்று கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படும்.
செல்வம்- அண்ணாநகர் நகராட்சி பள்ளிக்கு தலைமையாசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தணிகேசன்- திருநாவுக்கரசு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்.நகரில் நாய்கள், பன்றிகள் உள்ளது அதனை பிடிக்க வேண்டும்.
ஜெயந்திபழனி- மின்விளக்குகள் இல்லாத கம்பங்களில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும்.
கீதாசுந்தர்-ஆற்காடு -ஆரணி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளஅரசு மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும்.
குணாளன்- வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது அதனை தடுக்கவேண்டும்
அனு அருண்குமார் - பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வார வேண்டும் என பேசினார்.
இதில் நகரமன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, உதயகுமார், கண்ணன், விஜயகுமார், செல்வம், ராஜலட்சுமி துரை, காமாட்சி பாக்யராஜ், விமலா பூவரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






