search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regional Development Office"

    • 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
    • ஒன்றிய குழு தலைவர் பேச்சுவார்த்தை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் வரதாரெட்டிபல்லி ஊராட்சியில் வரதாரெட்டிபல்லி, பண்டப்பல்லி, மோடிகுப்பம், வி.எஸ்.புரம், குப்பகொட்டுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    கூலி வழங்க வில்லை

    இதில் சூழ்ச்சி முறையில் 100 நாள் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 100க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பணிதள பொறுப்பாளரும் இல்லை எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் பெயர்கள் பதிவு செய்ய முடியவில்லை எனவும் உடனடியாக தரவேண்டிய கூலியை தர வலியுறுத்தியும், பணிதள பொறுப்பாளரை நியமிக்க வலியுறுத்தியும் 100 நாள் பணிக்கு வருகை பதிவேடு பதிவு செய்ய வலியுறுத்தியும் நேற்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் இருந்தது விரைந்து வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் தமிழக முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான கூலித்தொகை விடுவிக்கப்ப டவில்லை எனவும், உடனடியாக பணிதள பொறுப்பாளரை நியமிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×