search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "red clay"

    • இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது.
    • உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.

    திருவாரூர் அருகே புலிவலம் ஆர்.பி.எஸ். சாந்தாநகர் பகுதியில் சாலை பணிக்காக தஞ்சாவூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரி மூலம் செம்மண் இறக்கும் பணி நடை ெபற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது. அந்த லாரியை மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பின்னர் லாரியில் இருந்த மண்ணை இறக்க டிப்பரை தூக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணி கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காலை நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பி மீது டிப்பர் லாரி உரசி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×