search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RECONSIDERED"

    • மத்திய அரசு அக்னி பாதை திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    • நல்ல திட்டம் என்றால் அதை எதிர்க்கட்சிகள் வரவேற்கும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறியதாவது: அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்கிற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டம் தேவையற்றது. இந்த திட்டத்தில் பல சதிகள் உள்ளன. இதற்கு பல்ேவறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    நல்ல திட்டம் என்றால் அதை எதிர்க்கட்சிகள் வரவேற்கும்.

    மத்திய அரசு ெதாடர்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது. மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநர் ரவி தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை போல பேசுகிறார். தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ சேர்ந்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை என நிதி அமைச்சர் சொன்னதாக செய்திகள் வந்தன. இருப்பினும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.

    நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.  

    ×