search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recipe Tips"

    • சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
    • காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்...

    * காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.

    * காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    * சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.

    * உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

    * சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.

    * ஒரு பவுல் அல்லது ஒருகப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் ஓரிரு நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.

    * புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.

    * பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் 'மைக்ரோ-ஹை'யில் வைக்கவும்.

    * தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

    * நமத்துப் போன சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிஸ்கட் வகைகளை, காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரப்பி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

    * பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவுதான் இருக்க வேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

    * உலோக பாத்திரங்களை அவனில் வைத்து சமைக்கக் கூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து, ஓவனின் உட்புற உலோக தகட்டில் எதிரொலித்து பக்க விளைவுகள் ஏற்படும்.

    ×