search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RBVS Manian"

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
    • மனுதாரர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

    சென்னை:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.

    ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் அதே கோர்ட்டில் ஜாமீன் கோரி மணியன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மணியன் சார்பில் ஆஜரான வக்கீல் பால்கனகராஜ், மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், மனுதாரர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'ஏற்கனவே ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தற்போது சூழ்நிலை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, மணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மணியன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

    • ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
    • திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் கிடையாது.

    சென்னை:

    மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன். 84 வயதான இவர் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

    அம்பேத்கர்தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதி கிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சியாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க.

    அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவர், டைப் அடிச்சவர், டைப்புக்கு புரூப் பார்த்தவர் தான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்.பி.வி.எஸ். மணியனை நேற்று இரவு கைது செய்தனர். இன்று காலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அல்லி ஆர்.பி.வி.எஸ்.மணியனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    ஆர்.பி.வி.எஸ். மணியன் தரப்பில் முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலிப்பதாக நீதிபதி அல்லி தெரிவித்தார்.

    ×