search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravindhranath MP"

    • சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.
    • விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி 2½ வயது மதிக்கத்தக்க சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மாவட்ட வனத்துறை மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அளித்து போராட்டங்களும் நடத்தினர். இதனைதொடர்ந்து அந்த தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையவே தோட்டத்தின் மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் எம்பியாக இருப்பதால் விசாரணைக்கு அழைக்க மக்களவை சபாநாயகருக்கு தேனி மாவட்ட வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரவீந்திரநாத் எம்.பியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேனி மாவட்ட வனஅலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

    ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகாமல் கடிதம் மூலம் பதில் அளித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ரவீந்திரநாத் எம்.பி. தேனி மாவட்ட வனசரக அலுவலர் சமர்தாவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×