search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramya Nambessan"

    நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் ரம்யா நம்பீசன், அவர் இசையில் பாட பயம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் பீட்சா, சேதுபதி என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அவர் அளித்த உற்சாக பேட்டி:-

    பெரிய ஹீரோக்கள், புது ஹீரோக்கள் பாரபட்சம் இல்லாமல் நடிப்பது ஏன்?

    எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.

    கவுரவ தோற்றத்தில் அதிகம் நடிப்பது ஏன்?

    என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.



    அடுத்து?

    விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறேன்.

    அந்த படத்துக்கு இளையராஜா இசை. அதில் பாட வாய்ப்பு உண்டா?

    அவர் இசையில் பாட எனக்கு பயம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்.
    பாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha
    போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் பாபி சிம்ஹா. இவரது நண்பர் சதீஷ். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான ரம்யா நம்பீசன், தனது பத்திரிகையாளர் தோழியை வைத்து பாபி சிம்ஹாவின் பேட்டிக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ரம்யா நம்பீசனின் தோழி வராததால், பாபி சிம்ஹா பேட்டி வேண்டாம் என்று சொல்லுகிறார்.

    அதே நேரத்தில் அந்த தோழி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட செய்தி வருகிறது. இந்த கொலையில் அவருடைய காதலர் சிக்குகிறார். இதை பாபி சிம்ஹா விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பிடிப்பட்டவர் கொலை செய்யவில்லை என்றும் வேறொரு சிறுவன் தான் கொலை செய்தான் என்பதை அறிந்துக் கொள்கிறார். 



    மேலும் இதுபோல் சிறுவர்களால் ஆங்காங்கே சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் வாதியான மதுபாலா செயல்படுவது பாபிசிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.

    இறுதியில், மதுபாலா அவ்வாறு செய்ய காரணம் என்ன? மதுபாலாவை பாபி சிம்ஹா எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக அக்னி தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம். துப்பறியும் காட்சிகளிலும் கோபப்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.



    அக்னி தேவி என்ற வில்லி அரசியல்வாதியாக மதுபாலா நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் சில உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கிறது. ஒரு சில இடங்களில் மிகைத்தனமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

    சதீஷுக்கு பாபியுடனே பயணித்து விசாரணையை கலகலப்பாக்கும் வேடம். எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், ஆகியோர் குணச்சித்திர பாத்திரங்களாக வருகின்றனர். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் இரண்டே காட்சிகளில் வந்து போகிறார்.



    சுவாதி கொலை உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களை இணைத்து கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. நாவலில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையிலும் இருக்கிறது. ஒரு கலவரத்தால் பலருடைய வாழ்க்கை முறை மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள் ஜேபிஆர், ஷாம் சூர்யா. நடிக, நடிகைகளின் மிகைத்தனமான நடிப்பு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் காதல், பாடல் காட்சிகள் என எந்த வேகத்தடையும் இல்லாமல் பரபரப்பான ஒரு துப்பறியும் படமாக அக்னி தேவி அமைந்துள்ளது.

    ஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் இசையும் திகிலை கூட்டுகின்றன. 

    மொத்தத்தில் ‘அக்னி தேவி’ வேகம் குறைவு.
    விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன் படத்தில் நடித்து ரம்யா நம்பீசன், தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #RamyaNambessan
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், நாயகி ரம்யா நம்பீசன் தனது பிறந்தநாளை தமிழரசன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவருக்கு படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    ×