என் மலர்
நீங்கள் தேடியது "Rally on behalf of the association"
- நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபா–ரம் செய்ய அனுமதி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பெறும் நலத் திட்டங்கள் தடை இல்லாமல் கிடைக்க வேண்டும்.
- இதில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அனைத்து பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபா–ரம் செய்ய அனுமதி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பெறும் நலத் திட்டங்கள் தடை இல்லாமல் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியு–றுத்தி, ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பொது தொழிளாலர் சங்க தலைவர் தனபால் தலைமையில் பேரணி நடைபெற்றது.
சங்க செயலாளர் ரகுராஜ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். பேரணியை ஏற்காடு சித்ரா குணசேகரன் எம்.எல்.ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனைத்து பொது தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பேரணி யில் கலந்து கொண்டனர்.






