search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajavaikkal"

    • உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி அருகிலும் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
    • நான்கு வழிச்சாலை கடக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின்பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடக்கிறது. இதில் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை, 50.07 கி.மீ., மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 45.38 கி.மீ., உள்ளிட்ட நான்கு பிரிவுகளாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போதுஉடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள, மாவட்ட முக்கிய ரோடு மாநில நெடுஞ்சாலைகளை, நான்கு வழிச்சாலை கடக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் பெதப்பம்பட்டி ரோட்டில், ஏரிப்பாளையம் அருகே ராஜவாய்க்கால் பள்ளத்தை கடந்து செல்லும் வகையில் மேம்பால பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாலத்துக்கான தூண்கள் கட்டும் பணி நிறைவு பெற்று, அடுத்த கட்டமாக ஓடுதளம் அமைக்கும் பணி துவங்க உள்ளது.இதே போல் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி அருகிலும், இத்தகைய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    ×