என் மலர்
நீங்கள் தேடியது "Railway station work"
- பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு
- மெத்தனப் போக்கு தொடர்ந்தால் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் நைனா மாசிலாமணி, செயலார் குணசீலன், பொருளாளர் தியாகராஜன், வெங்கட்ரா மன், எஸ்வந்த் ராவ், ஏகாம்பரம், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ரெயில் பணிகளுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
இது குறித்து சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி கூறியதாவது:-
அரக்கோணம் ரெயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி தருகிறது. தினமும் அரக்கோணத்தில் இருந்து 7ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கி ன்றனர்.
இங்கு கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் மேற்கொள்ளா ததால் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளா கின்றனர். நகரும் படிக்கட்டுகள் செயலற்று கிடைக்கிறது. ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது.
குழப்பமான முறையில் உள்ள வழித்தடத்தால், எந்த நடைமேடையில் எந்த ரெயில்கள் வருகிறது என தெரியாமல் பயணிகள் குழம்பி புலம்புகின்றனர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டதாக தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கூறினார்.
ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு பணியும் தொடங்க ப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் பணிகள் தொடங்காமல் ரெயில்வே நிர்வாகம் ஏமாற்றுகிறது.
இது போன்ற மெத்தனப் போக்கு தொடர்ந்தால் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






