search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail tracks"

    • ஆடு, மாடு மேய்க்க வேண்டாம் என அறிவுரை
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ஊராட்சிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் நாட்டறம்பள்ளி சாலையை கடந்து செல்லவும் திருப்பத்தூர் சாலையை கடக்கவும் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ள போது ஒரு சிலர் கேட் திறப்பதற்கு முன்பு தண்டவாளப்பாதையை கடந்து செல்கின்றனர்.

    இதனால் சில சமயங்களில் அவ்வழியாக வரும் ஓடும் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    மேலும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடும் போது தண்டவாள பகுதியில் ஆடு மாடுகள் கடந்து செல்லும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் இங்குள்ள ரெயில் தண்டவாளத்தை ரெயில் யாரும் அஜாக்கிரதையாக கடக்கக் கூடாது. தண்டவாள பாதையில் ஆடு, மாடுகள் போன்றவற்றை மேய்க்க கூடாது. தண்டவாளப் பாதையில் மலம் கழிக்க கூடாது என்றும் விதிமுறைகளை மீறி விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பது ெரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

    ×