என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail theft"

    • போலீசார் விசாரணை
    • பள்ளிக்கு விடுமுறை நாளில் துணிகரம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் வகுப்பு முடிந்ததும் பெல் அடிக்க தண்டவாள இரும்பு துண்டை பயன்படுத்தி வந்தனர்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மணி அடிக்கும் தண்டவாளம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எதிரே நிற்க வைத்து இருந்த பைக் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

    ×