என் மலர்
நீங்கள் தேடியது "RAFT FESTIVAL FLAG HOISTING"
- திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 3-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 3-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது
திருச்சி:
பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா நேற்று மாலை 5.30 மணிக்கு துனுர் லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவின் முதல் நாளான நேற்று அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.
விழாவின் 2ம் நாளான இன்று அம்மன் கிளிவாகனத்திலும், 3ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிஷப மூஷிகமயூர வாகனத்திலும், 7-ம் நாள் பல்லக்கிலும், 8-ம் நாள் சிம்மவாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதிஉலா வருகின்றார்.
விழாவின் 9-ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை கோ ரதத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், 10-ம் நாள் பல்லக்கிலும் வீதியுலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 3-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






