search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puravi picking festival"

    • பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது.
    • சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.

    நத்தம்:

    நத்தம் அருகே ஊராளி பட்டியில் பொன் அய்யனார்,கருப்பசாமி, சிய்யப்பார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதில் கடந்த 31-ம் தேதி பொங்கல்குடை பொன் அய்யனார் கோவி லுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தலும், பின்னர் இரவு கருப்பசாமி மின் அலங்காரத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்ப ட்டது. பின்னர் சிய்யப்பார் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகமும், தீபாராதனை களும் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலையில் சிய்யப்பார்சாமி உள்ளிட்ட சுப்பிரமணிய சாமி மற்றும் 21 சாமிகள் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடு களை ஊராளிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்த னர். மழைவேண்டி திரு விழா நடத்தப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்த னர்.

    ×