என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "proper maintenance"
- வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு குறித்த ஆலோ சனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா, கண்காணிப் பாளர் சக்திவேல் முன்னி லையில் நடைபெற்றது.
- பொதுச்சாலையில் பாதுகாப்பாக இயக்குவது, உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு குறித்த ஆலோ சனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா, கண்காணிப் பாளர் சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது,
கூட்டத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். பள்ளி வாகனங்கள் மோட் டார் வாகன விதிகளுக்கு உட்பட்டும் பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012-க்கும் உட்பட்டு முறையாகவும் பராமரிப்பது, பொதுச்சாலையில் பாதுகாப்பாக இயக்குவது, உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கூடுதல் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டு நல்ல முறையில் பயன்படுத்தப்ப டுவது, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உரிமம் நடப்பில் வைத்திருப்பது ஓட்டுனரின் உடல் தகுதி ஆகியவை குறித்து உரிய அறி வுரைகள் வழங்கப்பட்டது.
கூட்ட ஆய்வின்போது பள்ளி வாகனங்களை ஆய்வுக் குழு முன்பாக குறிப்பிட்ட தேதியில் ஆஜர் படுத்தி உரிய அனுமதி பெற்று பொது சாலையில் இயக்கப்பட வேண்டியது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாகனங்கள் உரிய ஆவணங் கள் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படாமல் பொதுசாலையில் இயக்கப்பட்டால் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மற்றும் வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்