என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Production of natural farmers"

    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு
    • இயற்கை உணவு பொருட்கள் விற்பனை

    வேலூர்:

    வேலூர் காந்திநகர் மகளிர் மன்ற வளாகத்தில் இயற்கை விவசாயிகளின் உற்பத்திகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் மக்கள் நல சந்தையை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அனைவரும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். இவ்வாறு இயற்கை முறையில் விளைவித்த உணவு பொருட்களை நாம் சாப்பிடும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதோடு, நம் உடல் நலத்தை பேணிக் காக்கலாம். அதேபோல் இயற்கை முறையில் உணவுப் பொருட்களை விளைவித்த விவசாயிகள் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கும் போதிய லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளை மக்களாகிய நாம்தான் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயம் பெருகும், மக்களுக்கும் மருந்தில்லா இயற்கை உணவு பொருட்கள் கிடைக்கும் என்றார்.

    இந்த மக்கள் நல சந்தையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மூலிகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திகள் மாடி தோட்டத்திற்கான செடிகள், உரங்கள், குரோ பேக் பூச்சிவிரட்டி விதைகள் மற்றும் உண்பதற்கு தயாராக கொடுக்கப்படும் உணவுகள் என பல வகைகள் உள்ளன.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் நல சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×