search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prize Giving Cermony"

    • கடையம் அருகேயுள்ள கோதண்டராமபுரம் - ராமலிங்க புரம் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது.
    • மாலையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள கோதண்டராமபுரம் - ராமலிங்க புரம் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் தலைமை தாங்கினார். ஊர் நிர்வாகி கந்தசாமி, முன்னிலை வகித்தார்., ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவகுமார் வரவேற்றார்.

    விழாவில் வழுக்குமரம் ஏறுதல்,உரி அடித்தல், இளவட்ட கல் தூக்குதல் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    ×