search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private ban employee died"

    நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 29). தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி காராமணிக்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு கம்பி போலீசார் வைத்திருந்தனர். அதனை கடக்கும்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சதீஷ்குமார் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×