search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prithvi-II missile"

    • பிருத்வி- 2 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
    • 350 கி.மீ. தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது.

    சந்திப்பூர்:

    இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள பாலசோர் சோதனை தளத்தில் நேற்றிரவு செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் பெற்ற பிருத்வி- 2 ஏவுகணை, 350 கி.மீ. தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

    அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். #PrithviMissile
    புவனேஷ்வர்:

    பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று இரவு நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. #PrithviMissile
    ×