search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRIORITY I"

    • டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாெமாழி கூறினார்.
    • நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தடி கொண்ட ஐயனார் திடலில் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. இயக்கத்திற்காக பல்லாண்டு உழைத்த தொண்டர்களை பாராட்டி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகஸே் பொய்யாெமாழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டிய ஒரு காலம் இந்த காலம். புதிய கல்விக் கொள்கை என்பது வரும் போது அதிலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி நாம் ஏன் அதை எதிர்க்கின்றோம் என்பதை ஏற்கனவே நமது தமிழக முதல்வர் கூயுள்ளார்.

    தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான கல்விக் கொள்கையை உருவாக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அதற்கான கூட்டம் கூட கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. மாதந்தோறும் சனிக்கிழமை அதற்கான கூட்டம் நடத்தப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்குள் அதற்கான கொள்கையை வடிவமைக்க தமிழக முதல்வர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

    ஆசிரியர் தகுதிதேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். அதே போல் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    தற்போது 13,331 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அனுமதியை முதல்வரிடம் பெற்றுள்ளோம். நிரந்தர பணி என்பது பெரிய செயல் திட்டம்.அதற்கான தேர்வை 5 முதல் 6 லட்சம் பேர் எழுதுவார்கள். இந்த பணிகள முடிய நான்கு அல்லது ஐந்து மாத காலங்கள் ஆகு. அதுவரை ஆரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்பதால் தான் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் தற்போது பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    13 ஆயிரத்து 331 ஆசிரியர்களில் 8 ஆயிரம் பேரை இந்த ஆணடு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் நியமனம் செய்து விடுவோம். எஞ்சிய ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் பணி நியமனம் செய்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  

    ×