search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presenting show"

    திருமருகலில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம்திரு மருகல் கால்நடை மருத்துவ மனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக ஏழை விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் 5 வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கால்நடை த்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோர் தலைமை தாங்கிளர். திருமருகல் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமரன் வரவேற்றார். இதில் திருமரு கல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 100 பயனாளிகள் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்க ப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் சிவகுமார், அருண், சிவப்பிரியா, பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயன், பவுஜியா பேகம் அபுசாலி, பாப்பாத்திகனி சாதிக் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×