search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pranav Goyal"

    ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். #JEEResult #PranavGoyal #Topper
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘ஜே.இ.இ. அட்வான்ஸ்டு’ என்னும் மேம்பட்ட கூட்டு நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. முதல் முதலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். ராஜஸ்தானை சேர்ந்த மீனாள் பராக் என்ற மாணவி 318 மதிப்பெண்கள் எடுத்து மாணவிகளில் முதல் இடம் பெற்றார்.

    மாணவர்கள் இந்த தேர்வு முடிவினை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in -ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். செல்போனில் பதிவு செய்தவர்கள், தேர்வு முடிவை குறுந்தகவல் மூலம் அறியலாம். வரும் 15-ந் தேதி முதல் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 11 ஆயிரத்து 279 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 18 ஆயிரத்து 138 பேர் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×