என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Practicing temper tantrums"

    • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
    • ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன்கள் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர், ஏப்.17-

    நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன்கள் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சாரந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

    ×