search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power Lift"

    • புதிய கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது.
    • மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது. மாவட்டத்தின் முழுமையான அலுவலகங்கள் அனைத்தும் இங்கு வந்து விடும்.

    மின் தூக்கி 4 இடங்களில் ஒரே நேரத்தில் 20 நபர்கள் செல்லக்கூடிய அளவில் அமையவுள்ளது. கட்டுமான பணிகள் 3.10.2023-க்குள் மு டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி திட்டமிட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே 2023 ஜீலை மாதம் திறக்க வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள் . அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட பின் மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும். மயிலாடுதுறை ரிங்ரோடு அமைப்ப தற்காக நிலமெடுப்பு பணிகள்நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, பொதுபணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) (சென்னை) விஸ்வநாத், பொதுபணித்துறை மண்டல தலைமை பொறியாளர் (கட்டடம்) (திருச்சிராப்பள்ளி மண்டலம்) ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், பொதுபணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வள்ளுவன், பொதுப்பணித்துறை செய ற்பொறியா ளர்மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர்நாகவேலு, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர்செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்த லைவர்காமாட்சி மூர்த்தி அபிராமி கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஒப்பந்தாரர், பொதுப்பணித்து றைச்சார்ந்த மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×