என் மலர்
நீங்கள் தேடியது "Power generation affect"
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டு நிலைகளில் செயல்படும் ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல் நிலை முதல்அலகில் உள்ள கொதிகலன்குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதே போல் இரண்டாவது நிலை முதல் அலகிலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.
மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.
வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது. இன்று காலை முதல் அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.






