search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poster campaign"

    வேலுர் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    வேலூர்:

    வேலூர் அடுத்த திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தேர்தல் முடிந்து 4 மாதகாலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    ×