என் மலர்
நீங்கள் தேடியது "Poonamallee jail"
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் கிளை சிறைச்சாலை, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சி.ஆர்.பி.எப். பட்டாலியன் பயிற்சி முகாம் ஆகியவை அருகருகே உள்ளன.
இந்த கிளை சிறைச்சாலையில் இந்த முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட பலர் அடைக்கப்பட்டடுள்ளனர்.
சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் டவரில் அமர்ந்தபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சிறைச்சாலை அருகே சுமார் 100 மீட்டர் உயரத்தில் பச்சை நிற வெளிச்சம் தெரிந்தது.
போலீசார் உஷாரான சிறிது நேரத்தில் அந்த மர்ம வெளிச்சம் காணாமல் போனது.
மர்ம நபர்கள் யாரேனும் சிறைச்சாலையை கண்காணிக்க ஆள் இல்லா சிறிய விமானத்தை பறக்க விட்டனரா? அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது. இது தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






