search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja Devariya"

    விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, தேவ், சார்லி, பூஜா தேவாரியா, பெய்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் விமர்சனம். #VellaiPookal #VellaiPookalReview
    விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

    அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார். 



    இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.

    கடைசியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. 

    விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.



    தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் வித்தியாசமான அமெரிக்காவை பார்க்க முடிகிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.

    மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்' பூக்கட்டும். #VellaiPookal #VellaiPookalReview #Vivekh

    விவகே் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் முன்னோட்டம். #VellaiPookkal #Vivekh
    இண்டஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் சம்பத், திகா சேகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வெள்ளைப்பூக்கள்'.

    விவேக், சார்லி, பூஜா தேவாரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன், கஜராஜ், டைலர் ராய், பெய்டன் ஜஸ்டின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஜெரால்டு பீட்டர், இசை - ராம்கோபால் கிருஷ்ணராஜூ, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், கலை - சுப்ரியா கிருஷ்ணன், தயாரிப்பு - அஜய் சம்பத், திகா சேகரன், திரைக்கதை - சண்முக பாரதி, விவேக் இளங்கோவன், இயக்கம் - விவேக் இளங்கோவன்.



    படம் பற்றி இயக்குநர் பேசும்போது,

    அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன் என்றார். 

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #VellaiPookkal #Vivekh

    வெள்ளைப்பூக்கள் டீசர்:

    ஹன்சிகாவை தொடர்ந்து இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களில் நடித்த, நடிகை பூஜா தேவரியாவின் செல்போனை ஹேக் செய்துள்ளனர். #PoojaDevariya
    நடிகர், நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இப்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போனையும் ஹேக் செய்துள்ளனர். இவர் தமிழில் மயக்கம் என்ன, இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செல்போன் முடக்கப்பட்டதை பூஜா தேவரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.



    “எனது செல்போனை சிலர் ஹேக் செய்துள்ளனர். எனது வாட்ஸ் அப்பில் இருந்து நண்பர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு தகவல்கள் அனுப்பி தொடர்புகொள்கிறார்கள். எனவே எனது நம்பரை வைத்து இருப்பவர்கள் அதனை நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
    நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய்.
    சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

    ஷோ போட் ஸ்டுடியோஸ் சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் ஜெய், தமிழ் சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடியுள்ளார். “ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். 
    அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு” என்று பேசியுள்ளார். 



    ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, “இயக்குநர் ஜெய், விமர்சனங்களில் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். ஆனால், அதற்கெல்லாம் “ஆந்திரா மெஸ்” வேலை வைக்காது. நிச்சயம் இந்தப் படத்தை எல்லோரும் தூக்கி நிறுத்துவார்கள். பத்திரிக்கையாளர்களோடு 25 வருட பழக்கம் எனக்குண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் தான் இன்று முன்னணி இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அந்த வரிசையில் ஜெய்யையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று பேசினார்.
    ×