search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri arrest"

    பொன்னேரி அருகே போலி ஆவணம் மூலம் தம்பியின் நிலத்தை விற்ற மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொனேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் செம்புலிவரத்தில் தங்கி தாம்பரம் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி காண்டீபன் கொளத்தூரில் தொழில் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் பெரும்பேடு கிராமத்தில் உள்ள காண்டீபனுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் கார்த்திகேயன் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த காண்டீபன் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இது பற்றி நடவடிக்கை எடுக்க பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து பொன்னேரி போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×