என் மலர்
நீங்கள் தேடியது "Pondicherry girl murder case"
- சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
- இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
- விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடமாற்றம்.
- பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தயால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள்.
மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும் 11 பேரில் அடங்குவர்.
- சிறுமி கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 12 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது மேலும் 12 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.







