search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poll violance"

    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளதால் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    புது டெல்லி :

    மேற்கு வங்காளம் மாநிலத்தின்பஞ்சாயத்து தேர்தல் வாக்குபதிவு  இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

    தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் மீட்டெடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் செயலுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பது போலாகிவிடும்.

    மேலும்,  ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் திரிணாமூல் காங்கிரசின் இந்த செயல் மேற்கு வங்காள மாநிலத்துக்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு யெச்சூரி தெரிவித்துள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    ×