என் மலர்
நீங்கள் தேடியது "Police on security duty"
- கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி நடந்தது
- கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
வேலூர்:
சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் பள்ளி கொண்டா சுங்க சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்ட த்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே பி பிரதாப் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சுங்க சாவடி கட்டணத்தை திரும்ப பெற கோரி கோஷமிட்டனர்.தேமுதிகவினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்த போலீசார் தே.மு.தி.க.வினரை கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த போராட்டத்தில் மாநகர செயலாளர் புருஷோத்தமன், உயர் மட்டக்குழு எம்.சி. சேகர், மாநில நிர்வாகி ஸ்ரீதர், மாநகர பொருளாளர் ஜே.சி.பி சுரேஷ், அவைத்த லைவர் ஜெகதீஷ், பொரு ளாளர் பொன். தனசீலன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் அக்பர், பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் ராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில், லோகநாதன், ஜமுனா ராணி, கலைவாணி, சந்திர வேலு, மோகனா, செயற்குழு உறுப்பினர் ஞானவேல், நகர செயலா ளர்கள் செல்வகுமார், ஞானசேகர் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், காமராஜ், வினோத் குமார், தேவன், மணிகண்டன், சம்பங்கி, சங்கர், அன்வர் பாட்ஷா, ஜெயராஜ், பாபு, ராஜேந்திரன், முருகன், சீனு உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






