search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police for recovering"

    • குன்னூரிலேயே இறங்கி விட்டனர்.
    • 3 மாணவர்களையும் அழைத்து ஒப்படைத்தனர்.

    ஊட்டி,

    கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாலிடெக்னிக்கில் பயின்று வரும் 3 மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். வாய் பேச முடியாத நிலையிலும், காது கேட்காத நிலையிலும் இருக்கக்கூடிய மாணவர்கள் வழி தெரியாமல் தவறான வழிகாட்டுதல் காரணமாக குன்னூரிலேயே இறங்கி விட்டனர். மாணவர்களின் உடமைகள் அனைத்தும் வந்த பேருந்திலேயே ஊட்டிக்கு சென்று விட்டது. இதனை அடுத்து உடனடியாக குன்னூர் காவல்துறையினர் ஊட்டி காவல்துறையினரை தொடர்பு கொண்டு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. ஊட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடைமைகளை மீட்டு அந்த 3 மாணவர்களையும் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் இந்த செயல் அனைத்து தரப்பு மக்களிடம் பாராட்டுதல்களை பெற்றது.

    ×