என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Police catches"
- கணவாய்பட்டி கருப்பணசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் 3 பேர் படுகாமயடைந்தனர்.
- போலீசார் விசாரணையில் போதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
குள்ளனம்பட்டி:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சொக்கநாராயணன்(37). கார் டிரைவர். நேற்று திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். கணவாய்பட்டி கருப்பணசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதினார். இதில் 3 பேர் படுகாமயடைந்தனர்.
சொக்கநாராயணன் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் ஜெயக்குமார், பரமசாமி தலைமையில் போலீசார் தடுப்புகளை சாலையில் ேபாட்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் தடுப்புகளையும் மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரட்டிச்சென்று பொன்னகரம் அருகே காரை மடக்கிபிடித்தனர்.
போலீசார் விசாரணையில் சொக்கநாராயணன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை இன்று போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்