search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police ban"

    தென் பெண்ணை ஆற்றில் இரவோடு இரவாக மது பிரியர்களுக்காக சாலை அமைத்ததை தடுத்த போலீசார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் அருகே புதுச்சேரி மாநிலம் உள்ளதால் அங்குள்ள மது பாட்டில்கள் விலை குறைவாகவும் மற்றும் சாராயம் விற்பனை செய்வதால் தமிழகப் பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான மது பிரியர்கள் புதுவை மாநில பகுதிக்கு சென்று மது அருந்தி வருகின்றனர்  இதன் காரணமாக கடலூர் அருகே உள்ள புதுவை மாநில எல்லையில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் கடந்த சில வருடங்களாக மது பிரியர்களுக்காக இலவசமாக ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தினர் தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது இலவச படகு சவாரி, சிறிய மரப்பாலம், தண்ணீர் செல்லாத போது மண் சாலை அமைத்து மதுபிரியர்கள் எளிதாக சாராயக்கடைக்கு சென்று மது குடிப்பதற்கு ஏதுவாக அமைத்தனர்.

    இதன் காரணமாக கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறையும் நிலை ஏற்பட்டது. மேலும் மது பிரியர்கள் புதுவை மாநிலத்திற்கு சென்று மது குடிக்காமல் தடுப்பதற்கு போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கடும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.தென்பெண்ணை ஆற்றில் பாதி பகுதி புதுவை மாநிலத்திற்கும், பாதி பகுதி தமிழக பகுதிக்கும் சொந்தமானது என்பதால் சாராயக்கடை உரிமையாளர்கள் புதுவை மாநில பகுதிகளில் மண்சாலை, சிறிய பாலம் போன்றவற்றை உருவாக்கி தயார் நிலையில் வைத்துள்ளனர்மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ,வருவாய்த்துறை அதிகாரிகள் கண்ணி இமைக்கும் நேரத்தில் தங்களுக்கு தேவையான சாலை வசதிகளை மேம்படுத்தி மது பிரியர்கள் வந்து செல்வதற்கு சாலை வசதிகளை தயார்படுத்தி விடுகின்றனர்  இந்த நிலையில் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம் பட்டு பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடந்து சென்று புதுவை மாநிலம் மணல்மேடு பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு எளிதாக செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணி ஜே.சி.பி. வாகனம் மூலம் விறுவிறுப்பாக நடந்தது 

    இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள்சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தமிழகப் பகுதிகளில் தற்காலிகமாக அமைக்க ப்பட்ட மண்சாலையை ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினார்கள்  மேலும்யாரும் செல்லாமல்இருக்க அதிரடியாக பள்ளம் தோண்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ் வழியாக மது பிரியர்கள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இதற்கான ஏற்பாடுகள் செய்தது யார்? இதில் சாராயக்கடை உரிமையாளர்கள் தலையீடு உள்ளதா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்  மேலும் தமிழகப் பகுதிகளில் ஆற்றில் அத்துமீறி மண் சாலை அமைத்தது தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ×