என் மலர்
நீங்கள் தேடியது "Plastic products disrupt human nature"
- வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் பிளாஸ்டிக் பயன்பாடு தீமைகள் குறித்தும் கட்டுரை கவிதை ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அப்ேபாது பேசிய அவர் தற்போது பிளாஸ்டிக் பய ன்படு த்துவதை தடுப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மனித இயற்கையை சீர்குலைக்கும் ஒன்று என்றும் எதிர்காலத்தில் இந்த பிளாஸ்டிக் கால் பெரும் தீமைகளை மக்கள் சந்திக்க இருக்கும் என்றும் பிளாஸ்டிக் என்று எடுத்து கூறி விழிப்புணர்வு எற்படுத்தினர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் நபர்கள் மீது ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அதையும் மீறும் பட்சத்தில் கைதி ெசய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வியா பாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நி கழ்ச்சியில் சப் கலெக்டர் பாத்திமா நகராட்சி கமிஷனர் லதா சேர்மன் லட்சுமி துணை சேர்மன் கலாவதி சமூக பாதுகாப்பு தாசில்தார் சுமதி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவா அனைவருக்கும் நன்றி கூறினார்.






