search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planting program"

    • ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிரந்திர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி.கதிரவன், நீதித்துறை நடுவர் பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஷ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர். சேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலுவலக நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×