search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planting of 10 thousand saplings in the lake area"

    • வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • கலெக்டர் ஆய்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நட சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரிப்பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட வே ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தரராஜன் வரவேற்றனர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏரிப்பகுதியில் வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கூடலூரில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சத்தில் சாலை, பூங்கா, குடிநீர் பணிகளையும், அங்கு உள்ள 57 வீடுகள் புதுப்பிக்கப்படும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கூடலூர், ஐப்பேடு பகுதிகளில் 100 நாள் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ×