என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pill distribution"

    • காலை 9 மணி முதல் 2 மணி வரை வழங்கபடுகிறது
    • 5 லட்சம் பேருக்கு வழங்க இலக்கு

    வேலூர்:

    தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் வயதுக்குட்பட்ட வர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் தவிர) இன்றும் விடுப்பட்டவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.

    அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    1 வயதிலிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையானது காலை 9 மணி முதல் 2.00 வரை வழங்கப்பட்டது. இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மத்திய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர் மாவட்டத்தில் 1 லிருந்து 19 வயதுக்குட்பட்ட 3,90,303 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,13,203 பெண்களுக்கும் மொத்தம் 5,03,506 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு வழங்கபட்டது.

    நீ கூட திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று குடற்புழு மாத்திரை விநியோகம் செய்யப்பட்டது.

    குடற்புழு நீக்கத்தினால் ரத்த சோகை தடுக்கப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவு திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

    குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. மேற்படி முகாமினை பயன்படுத்தி கொண்டு குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ×