என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pharmacy building"

    • விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாநகரில் உள்ள கலைஞர் கருணாநிதி பஸ் நிலையத்தில் இருந்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ் வசதி ேசவை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ் நீடிப்பு சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தும், கால்நடை மருந்தகக் கட்டடத்தை திறந்து வைத்தும் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சி, கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கழுவேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை நீடிக்கப்பட்ட காலை 2 நடைகள் மற்றும் மாலை 2 நடைகள் செல்லும் பேருந்து எண் 22/1, ஊத்துக்குளி ஆர்.எஸ், என்.பி.எஸ் நெருப்பெரிச்சல், வாவிபாளையம் திருக்குமரன் நகர், கணக்கம்பாளையம் வழியாக பெருமாநல்லூர் வரை காலை 1 நடை மற்றும் மாலை 1 நடை செல்லும் பேருந்து எண் 10, திருக்குமரன் நகர் நீடிப்பு வாவிபாளையம் வரை செல்லும் காலை 2 நடைகள் மற்றும் மாலை 2 நடைகள் செல்லும் பேருந்து எண் 43, கூலிபாளையம் நால்ரோடு, வாவிபாளையம், நெருப்பெரிச்சல் மற்றும் என்பிஎஸ் வழியாக சென்று மீண்டும் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் வந்தடையும் காலை 3 நடைகள் மற்றும் மாலை 3 நடைகள் செல்லும் பேருந்து எண் 102/103 ஆகிய எண்கள் கொண்ட பேருந்து வழித்தட நீடிப்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதனைத்தொடர்ந்து திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்ட நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இடுவாய் கால்நடை மருந்தக கட்டிடம் தரைத்தளமானது 155.71 சதுர மீட்டர் பரப்பளவு ஆகும். கால்நடை மருந்தக கட்டிடத்தில் பணியாளர் அறை, மருந்தக இருப்பு அறை, கழிப்பறை, பதிவறை, மருத்துவர் அறை போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டத்தலைவர் இல.பத்மநாபன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், செயற்பொறியளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன், பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்)மாரியப்பன், உதவி மேலாளர்கள் ராஜேந்திரன், சரவணன், கிளை மேலாளர்கள் குணசேகரன், ராமநாதன், கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர்சத்யராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×