என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Petition to protest"
- வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
- முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறு தல், முதியோர் உதவி த்தொகை, குடும்பக்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அதிகாரி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணனிடம் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அறிவிப்பு செய்வதை கண்டித்தும், சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெறும் வரை வருகிற 15ந் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
இதனை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரி களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார். அப்போது நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு அதிகாரி கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்