search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pestle"

    • பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
    • இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த “அசிரோபேகஸ் பப்பாயே” என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மரவள்ளி, மல்பரி, பருத்தி, பப்பாளி, கொய்யா, கத்தரி, தேக்கு, கோகோ, பழப்ப யிர்கள், மலர் செடிகள் போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவு பூச்சி பெரு மளவு தாக்கி சேதப்படுத்துகிறது.

    பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.

    இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த "அசிரோபேகஸ் பப்பாயே" என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.

    விவசாயிகள் அனை வரும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு பதிலாக இந்த உயிரியல் ஒட்டுண்ணியை பயன்படுத்தி பயனடை யலாம் என கபிலர்மலை வட்டார வேளாண்மை பொது அலுவலர் ராதா மணி தெரிவித்துள்ளார். 

    ×