என் மலர்
நீங்கள் தேடியது "Perumal street walk"
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- நவராத்திரி 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் நவராத்திரி 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது.
நான்காம் நாள் உற்சவம் முன்னிட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி அமிர்தவல்லி தயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி தங்க கேடயத்திலும் அமிர்தவல்லி தாயார் சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் திருக்கோவில் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






