search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permanent job"

    • இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத்துள்ளோம்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். இவர்களில் தனியார் காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பேர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். என்.எல்.சி. சுரங்கம் -1 பாயிண்ட் நுழைவு வாயில் முன் அவர்கள் உள்ளிருப்பில் ஈடுபட்ட னர். அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத் துள்ளோம். பாதிக்கப்பட்ட எங்க ளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, காரைக்கால், ஏனாம் அரசு சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சங்க தவைர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் லூர்துமரியநாதன், துணை பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, போராட்டத்துக்கு கவர்னர், முதலமைச்சர் தீர்வு காணாவிட்டால் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தின்படி வரும் செப்டம்பர் 4ம் தேதி சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முற்றுகை, 11ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுதல், 11ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    ×