என் மலர்
நீங்கள் தேடியது "Periyakulam-Adukum"
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கனமழை பெய்ததால் அடுக்கம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன.
- சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கொடை க்கானல்-அடுக்கம் பெரியகுளம் சாலையில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடை க்கானல் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கனமழை பெய்ததால் அடுக்கம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறை கள் உருண்டன.
விபத்து க்களும் ஏற்பட்டதால் சாலையில் போக்கு வரத்திற்கு தடைவிதித்து மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பணிகளை மேற்கொண்டு போக்கு வரத்தை சீரமைத்தனர்.
இந்த இடத்தில் நிரந்தர மாக சீரமைப்பு பணிகளை தற்போது மேற்கொண்ட போது பாறைகள் மற்றும் கற்கள் உருண்டன.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிரந்தரமாக சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
எனவே கொடை க்கானல்-அடுக்கம் பெரியகுளம் சாலையில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. சீரமைப்பு பணி மேற்கொ ள்ள 1 மாதத்திற்கு மேலாகும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ெதரி வித்துள்ளனர்.
இதனால் அடுக்கம் சாமக்காடு, பாலாமலை, பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கும் பொருட்களை பெருமா ள்மலை, வத்தலக்குண்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பைக்குகளில் செல்லவும் நெடுஞ்சாலைத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து கொடை க்கானல் நெடுஞ்சாலை த்துறை உதவிப் பொறியாளர் பரதன் கூறியதாவது,
கடந்த புயலின் போது ஏற்பட்ட நிலச்சரிவு பகுதி யில் தற்காலிக சீரமைப்பு பணி செய்யப்பட்டு இருந்தது. இந்த தற்காலிக சீரமைப்பு பணிகள் நிரந்தரமாக சீரமைப்ப தற்குரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு ள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்க முடியாது. விரைவில் இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.






