என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People broke coconuts and lit camphor and offered darshan"

    • ஆடி பரணி முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ரத்தினகிரி:

    ரத்தினகிரியில் ஆடி பரணி முன்னிட்டு பால முருகன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.

    ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. நேற்று ஆடி பரணி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சாமி திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்தை பாலமுருகனடிமை சாமிகள் சிறப்பு பூஜை செய்து துவக்கி வைத்தார். கோவில் மலை அடிவாரத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட ஊர்வலம் கீழ்மின்னல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.

    அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் வி.சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×